எனக்கும் இபிஎஸ் மீது மனவருத்தம் உள்ளது! “மன வருத்தம் இருந்தாலும், பொதுச்செயலாளரிடம் தான் சொல்ல வேண்டும்!” அடுத்த விக்கெட் செல்லூர் ராஜு?
I too have a grudge against EPS Even if I have a grudge I should tell the General Secretary Will Sellur Raju be the next wicketkeeper
அதிமுகவில் சமீபத்தில் நடந்த உள்கட்சி அதிர்வுகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை ஊடகங்களில் பேசாமல், நேரடியாக பொதுச்செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
செங்கோட்டையன் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அவர் கூறியதாவது: “அதிமுகவின் ஒற்றைத் தலைமை கோஷம் எழுந்த போது, அதை முதலில் கைதூக்கி ஆதரித்தவர் செங்கோட்டையன் தான். அப்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று பாடுபட்டவர் கூட அவர் தான். இப்போது மட்டும் திடீரென என்ன மாறிவிட்டது என்பது புரியவில்லை,” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறியதாவது: “எடப்பாடி பழனிசாமி எது சரியோ அதையே செய்கிறார். திமுக அரசின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டும் பணியில்தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் சிலர் தங்கள் தனிப்பட்ட நோக்கங்களை முன்னிறுத்துவதால் கட்சியில் பிரச்சனைகள் உருவாகின்றன. அதிமுகவில் பலரும் மீண்டும் திரும்பி வந்துள்ளனர், அவர்களுக்கு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. எனக்கும் சில மன வருத்தங்கள் இருந்திருக்கலாம், ஆனால் அதை ஊடகங்களில் சொல்லுவது தவறு. பொதுச்செயலாளரிடம் நேரடியாகவே சொல்ல வேண்டும்,” என்றார்.
செல்லூர் ராஜு மேலும், “மக்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கிறது. மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுத்தது யார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்,” என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது செங்கோட்டையன் நீக்கப்பட்டதை அடுத்து அதிமுகவின் உள்ளகத்தில் நிலவும் அதிர்வுகள் கட்சிக்குள் புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேசமயம், செல்லூர் ராஜுவின் சமநிலை கருத்து, கட்சியில் ஒருமைப்பாடு தேவை என்பதற்கான ஒரு முக்கிய சைகையாகவும் பார்க்கப்படுகிறது.
English Summary
I too have a grudge against EPS Even if I have a grudge I should tell the General Secretary Will Sellur Raju be the next wicketkeeper