திண்டுக்கல்: காதல் மனைவி இறந்த துயரத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் மனைவி இறந்த துயரத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (25). இவரது மனைவி கௌசல்யா (22). இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கௌசல்யா உயிரிழந்துள்ளார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நந்தகுமார் யாருடன் பேசாமல் இருந்த நிலையில், நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வேடசந்தூர் போலீசார் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband suicide in Dindigul


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->