மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பெத்தநாயக்கன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மகனை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கணவர் வாசுதேவன், தற்கொலை செய்வதற்காக பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து வாசுதேவனை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி வாசுதேவன் உயிரிழந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband suicide in Cuddalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->