கிருஷ்ணகிரி: மனைவியின் கள்ளக்காதலால் கணவர் எடுத்த விபரீத முடிவு.!
Husband commits suicide in kirishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிஜிதாஸ்(31). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வாணியர் தெரு பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சுஷ்மிதாதாஸ். இந்நிலையில், சுஷ்மிதாதாஸ்க்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் தவறான உறவில் இருந்து வந்துள்ளார்.
இதையறிந்த பிஜிதாஸ் மன வேதனையடைந்து, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்குப்போட்டு கொண்டுள்ளார். இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த பிஜிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பிஜிதாசின் நண்பர் ரூபக்தே கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Husband commits suicide in kirishnagiri