மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு.! மாமியார் வீட்டு முன்பு விஷம் குடித்த கணவர்.! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமியார் வீட்டு முன்பு விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் நல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மணிகண்டன் (35). இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஜோதி, கணவருடன் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து மணிகண்டன் நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு சென்று ஜோதியை குடும்பம் நடத்த வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ஜோதி வர மறுத்ததால் மனமுடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்து விஷத்தை எடுத்து குடித்துள்ளார்.

இதையடுத்து விஷம் குடித்து மயங்கி கிடந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband commits suicide in dharmapuri


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->