ஈரோடு.! மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனையில் கணவர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் மன வேதனையில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நவீன்குமார்(30). இவரது தாமரைசெல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நவீன் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தாமரைச்செல்வி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இதையடுத்து நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தாமரைச்செல்வி எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நவீன் குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து வந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நவீன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband commits suicide by hanging in erode district


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->