செல்போன் எண்ணை பிளாக் செய்த கணவர்...! கர்ப்பிணி மனைவி எடுத்த நெஞ்சை உலுக்கும் விபரீத முடிவு...! - ஒரு நொடி கோபத்தால் நேர்ந்த கொடூரம்...!
Husband blocks his cell phone number heartbreaking decision made by his pregnant wife cruel act committed moment anger
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 23 வயதான ரஞ்சிதா, ஆறு மாதங்களுக்கு முன்பு கிண்டி நாகிரெட்டி தோட்டப் பகுதியைச் சேர்ந்த குமாரேஷை திருமணம் செய்து கொண்டார். குமாரேஷ் வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்திற்குப் பின்னர் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக குடும்பச் சூழலில் மனக்கசப்பு உருவானது. இதையடுத்து ரஞ்சிதா தனது தாயார் வசித்து வந்த வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தங்கி வந்தார்.

இந்நிலையிலும், கணவருடன் செல்போன் வாயிலாக தொடர்பில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை ரஞ்சிதா தனது கணவரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றதாகவும், ஆனால் அந்த அழைப்புகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், அவரது தொடர்பு எண் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் பின்னர் மனவேதனையில் இருந்த ரஞ்சிதா உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவலறிந்த வேளச்சேரி காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். பின்னர் உடல் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.உடற்கூறு ஆய்வில் ரஞ்சிதா கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத் தகராறு, தொடர்பு துண்டிக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மையமாகக் கொண்டு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Husband blocks his cell phone number heartbreaking decision made by his pregnant wife cruel act committed moment anger