மனைவியை கொடூரமாக கத்திரிக்கோலால் குத்திய கணவர்.! ஈரோடு அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மனைவியை கணவர் கத்திரிக்கோலால் குத்திய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்குமார் (38). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதையடுத்து செந்தில்குமார், பிரியாவை தன்னுடன் வருமாறு வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் பிரியா வர மறுத்ததால் இருவருடைய மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், பிரியாவை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் பிரியாவின் அலறல் சட்டம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியில் இருந்தவர்கள் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, மனைவியை கத்திரிக்கோலால் குத்திய கணவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband arrested for stabbing wife with scissor in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->