மது போதையில் தகராறு.! மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஐசக் சாமுவேல் (29). இவருடைய மனைவி சித்ரா. இந்நிலையில் ஐசக் சாமுவேல் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடையே தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து நேற்றும் மது அருந்திவிட்டு வந்த ஐசக் சாமுவேல், மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஐசக் சாமுவேல், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சித்ராவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சித்ராவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை போலீசார், மனைவியை கத்தியால் குத்திய ஐசக் சாமுவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband arrested for stabbing wife in Tirunelveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->