#ஓசூர் || இரு சக்கர வாகனம் லாரி மோதி விபத்து.. கணவன் மனைவி பரிதாப பலி..!
Husband and Wife Death In accident
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூரை சேர்ந்தவர் அன்பு. இவர் தன் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் ஐங்குந்தம் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாமல்பள்ளம் என்ற பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றதால் , அன்புவின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது.

இதில், அன்பு மற்றும் அவரது மனைவி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Husband and Wife Death In accident