திருப்பூர் : மகளிர் சுய உதவி குழுவில் கடன்.! தலைமறைவான கணவன்-மனைவி கைது.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனை பெற்றுக்கொண்டு தலைமறைவாக இருந்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ரேகா (35). இதே பகுதியை சேர்ந்த சாந்தாமணி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு, மகளிர் சுய உதவி குழு மூலம் ரேகா, சாந்தமணியிடமிருந்து ரூபாய் 68,000 கடன் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ரேவதி பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால், சாந்தாமணி அவரிடம் பலமுறை அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் ரேவதி திடீரென கணவருடன் மாயமானார். இதைத்தொடர்ந்து குன்னத்தூர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து சாந்தாமணி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கடனை பெற்றுக் கொண்டு தலைமறைவான ரேவதி மற்றும் அவரது கணவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காங்கேயம் பகுதியில் தலைமறைவாக இருந்த கணவன் மனைவி இருவரையும் கைது செய்த குன்னத்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband and wife arrested for taking loans from women self help group and absconding in Tiruppur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->