நடுரோட்டில் கிடந்த மனித தலை - சேலத்தில் பயங்கரம்.!
human head on mid road in salem
சேலம் மாவட்டத்தில், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் உள்ள குள்ளம்பட்டி பகுதியில் சாலையில் ரத்தத்துடன் மனிதத் தலை கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனிதத் தலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் உடல் பாகங்கள் கிடக்கிறதா? என்ற சந்தேகத்தில் தேடி வந்தனர்.

அப்போது, சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அந்த நபர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பதும், அவர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பதும் தெரியவந்தது.
மேலும், அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வந்ததும், தற்போது இந்த கொலையையும் அவர் செய்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் திருமலை கொலை செய்த நபர் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடுரோட்டில் மனிதத் தலை கிடந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
human head on mid road in salem