24 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியர் கைது – இமாச்சலில் அதிர்ச்சி சம்பவம்!
Himachal teacher arrested for sexually abusing 24 girls
கணித ஆசிரியர் ஒருவர் 8ம், 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 24 சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், கணித ஆசிரியர் ஒருவர் 8ம், 9ம் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 24 சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் அனைவரும் ஒருமித்தமாக, பள்ளி முதல்வர் காந்தா தேவியிடம் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, முதல்வர் அந்த புகாரை பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவிற்கு அனுப்பியதுடன், போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். "பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உடனடி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர்.
கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறியதாவது :“வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில், ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
Himachal teacher arrested for sexually abusing 24 girls