திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்க தடை.. உயர் நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணாமலை வேங்கைகால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது அது மட்டும்மில்லாமல் கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப் படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் வேங்கைகால் பகுதியில் கருணாநிதி சிலையை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேசமயம் தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High court orders ban on Karunanidhi statue in Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->