தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்த வழக்கு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆய்வு..! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு வரும் 24-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்து. இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி சுவாமிநாதன் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. ஆனால், இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த நடைமுறை இதுவரை மாறவில்லை.

இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என உய்ரநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ' பாரம்பரியமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீப தூணில் மட்டுமே ஏற்றப்படும்' என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற கிளை நீதிபதி சுவாமிநாதன் பார்வையிட்டுள்ளார். இதன் போது தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து நீதிபதி ஆய்வு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court branch judge inspects Thiruparankundram hilltop


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->