சென்னையில் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு; பொதுமக்கள் பெரும் அவதி..!
Heavy rains in Chennai affect flight services
சென்னையில் கனமழை பெய்து வருவது காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதல் வெயில் வாட்டி எடுத்த நிலையில், பிற்பகலுக்கு பிறகு பெய்யும் மழையினால், வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சென்னை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, மதுரை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைகாற்றுடன் கனமழை கொட்டி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து 149 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. அத்துடன், பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. மேலும், 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துள்ளன. இதனால், விமானப் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
English Summary
Heavy rains in Chennai affect flight services