மாண்டஸ் புயல் எதிரொலி | சென்னை ஒட்டிய மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.!
Heavy rain warning for districts adjacent to Chennai
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் வங்கக் கடலில் தீவிரப்புயலாக நிலவிய நிலையில் தற்போது புயலாக வலுவிழந்து சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்திருந்த நிலையில், தற்போது வடமேற்கு திசையில் மட்டுமே மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் கடந்த ஆறு மணி நேரமாக புயல் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் கரையைகடக்கும் என்றும், அப்போது மணிக்கு 85கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையை ஒட்டிய மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Heavy rain warning for districts adjacent to Chennai