நாளை 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்'! சென்னை - புதுச்சேரி இடையே இன்று இரவு கரையைக் கடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் 12 மணி நேரம் நீடிக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சின்னம் தற்போது தமிழ்நாட்டுக் கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது.

கரையைக் கடக்கும் நேரம்

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்றைய (டிச. 2) மழை எச்சரிக்கை

தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக இன்று மிகக் கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு.

இதைத் தவிர, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளைய (டிச. 3) மழை எச்சரிக்கை

'ஆரஞ்சு அலர்ட்' (மிகக் கனமழை): கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள். கனமழை: சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy Rain Chennai Rain tamilnadu


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->