ஒரு வாரத்துக்கு வெப்பம் அதிகரிக்கும்..வானிலை மையம் எச்சரிக்கை!
Heat will increase for a weekWeather center warns
அடுத்த ஒரு வாரத்துக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது .குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன் தினம்,நேற்று மிதமான மழை பெய்தது இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்கு அதிக வெப்ப இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடந்த சில நாட்களாக சென்னையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது, புதுவை ,வேலூர் ,திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருந்தது.தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கினாலும், தற்போது பருவமழையின் தீவிரம் குறைந்து இருப்பதாலும், வறண்ட காற்று ஊடுருவி இருப்பதாலும் கோடை காலம் போல வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருந்தது. அதில் அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி வெப்பம் பதிவானது.

அதற்கடுத்தபடியாக, ஈரோடு 101.48 டிகிரி, மதுரை விமான நிலையம் 101.3 டிகிரி, சென்னை மீனம்பாக்கம் 100.58 டிகிரி, திருச்சி 100.58 டிகிரி, திருத்தணி 100.4 டிகிரி, பரங்கிப்பேட்டை 100.4 டிகிரி, நாகப்பட்டினம் 100.22 டிகிரி ஆகிய இடங்களிலும் 100 டிகிரியை தாண்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக அடுத்த ஒரு வாரத்துக்கும் தமிழ்நாட்டில் சில இடங்களில் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் வெப்பசலனத்தால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 12-ந் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, மீண்டும் தென் மேற்கு பருவமழையை தீவிரப்படுத்த உள்ளது.
English Summary
Heat will increase for a weekWeather center warns