பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி எடுத்த விபரீத முடிவு.. கன்னியாகுமரில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தினவிளை பகுதியை சேர்ந்தவர் ரோசம்மாள். இவர் தனது மகள் வழி பேரனான ஜெகன் என்பவரை சிறு முதலிலிருந்தே வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

இதனை அறிந்த பாட்டி ரோசம்மாள் அவரை பணம் செலவழித்து திரும்ப அழைத்து வந்துள்ளார். மேலும்,  பேரணி உயிரை காப்பாற்றுவதற்காக ஆசை ஆசையாக கட்டிய வீட்டை விற்று மருத்துவம் பார்த்து உள்ளார். எனினும் சிகிச்சை பயனளிக்காமல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகன் உயிரிழந்தார்.

இதனால், மனமுடைந்த ரோசம்மாள் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GrandMother Commiteed Suicide Near Kanniyakumari


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->