நடுரோட்டில் கொடூரமாக தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்.. காவல்துறை எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தை யொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர்.

அப்போது திடீரென மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சண்டையிட்டனர். இதில் நடுரோட்டில் நின்று ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவிகளும் பொதுமக்களும் அங்கு இருந்து தள்ளிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் பள்ளிக்கு நேரடியாக சென்று மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt school students fight in Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->