திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து - நொடியில் உயிர் தப்பிய பணியாளர்கள்.!
govt bus fire accident workshop in chennai
திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து - நொடியில் உயிர் தப்பிய பணியாளர்கள்.!
சென்னையில் உள்ள அண்ணாநகர் கிழக்குப் பேருந்து பணிமனையில் எஸ்.இ.டிசி பேருந்துகள், உயர் ரக பேருந்துகள் உள்ளிட்டவை சர்வீஸ் செய்யப்பட்டு மற்ற பேருந்து நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதிலும் முக்கியமாக சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை, தாம்பரம், திருவான்மியூர் போன்ற பேருந்து நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

இந்த நிலையில், மாலை ஏழு மணிக்கு கோயம்பேட்டில் இருந்து பெங்களூருக்கு செல்லவிருந்த ஏசி பேருந்து பணிமனையில் இருந்து புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.
அப்போது திடீரென பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதைப்பார்த்த பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து தூரமாக சென்றனர். இதையடுத்து பேருந்து சில நொடிகளிலேயே திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
உடனே பணியாளர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு வீரருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
govt bus fire accident workshop in chennai