குருவிநந்தம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி..MLA செந்தில்குமார் வழங்கினார்! - Seithipunal
Seithipunal


குருவிநந்தம் அரசுப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில் மேல்நிலை பள்ளி பயிலும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு  வருடம் தோறும் இலவச மிதி வண்டிகளை வழங்கி வருகிறது, அந்த வகையில் இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாகூரை அடுத்துள்ள குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியர் குமாரராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் வரவேற்புரை கூறினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்பாளர் பரமேஸ்வரி இருபால் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக பாகூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டு 53 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் குலசேகரன் பாராட்டுரை வழங்கினார். பட்டதாரி ஆசிரியை கோமளா நன்றி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free bicycle for the students of Guruvinatham Government School MLA Senthilkumar provided it


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->