முந்தி செல்ல முயன்றதால் வந்த வினை - நொடியில் நடந்த விபரீதம்.!
four peoples injured for accident in viruthachalam
முந்தி செல்ல முயன்றதால் வந்த வினை - நொடியில் நடந்த விபரீதம்.!
கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம் அடுத்த கர்ணத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவர் மங்கலம்பேட்டை பெல்லூர் புறவழிச் சாலையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற கார் சடகோபனின் காரை முந்தி செல்ல முயன்றது. அப்போது இரண்டு கார்களும் ஒன்றுக்கு கொன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதைபார்த்த அருகிலிருந்தவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
அதன் பின்னர் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முந்தி செல்வதில் ஏற்பட்ட விபத்தால், நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
four peoples injured for accident in viruthachalam