கோவையில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திய 4 இளைஞர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


கோவையில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்திய 4 இளைஞர்கள் கைது.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி பகுதியில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அஜ்ஜனூர் ஸ்ரீ ராம் கார்டனில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 8.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இவற்றின் மதிப்பு ரூ.1.10 லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் தெரிவித்ததாவது, "கைது செய்யப்பட்டவர்கள் கோயம்புத்தூரில் இருந்து தேனி மாவட்டத்திற்கு காரில் கஞ்சாவை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தனர். 

அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு கஞ்சாவை யார் விற்பனை செய்தார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றுத் தெரிவித்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for drugs kidnape in coimbatore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->