ரூ.18 கோடி பெறுமதியில் துபாயில் இருந்து கடத்தி வெளிநாட்டு சிகரெட்: ஸ்ரீபெரும்புதூரில் பறிமுதல்..!
Foreign cigarettes worth Rs18 crore smuggled from Dubai seized in Sriperumbudur
18.2 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குறித்த சிகரெட்கள் துபாயில் இருந்து கடல் வழியாக குளியலறையில் பொருத்தப்படும் பொருட்களில் கடத்தி வரப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் சென்னை மண்டல அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலை தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய சோதனையில் 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு தோராயமாக ரூ.18.2 கோடி ஆகும் என கூறப்படுகிறது. இந்த சிகரெட் பெட்டிகளில் 2003-ஆம் ஆண்டு சட்டப்படி, உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும், சென்னை துறைமுகம் வழியாக கடத்தி வரப்பட்ட 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.79.67 கோடி என கூறப்படுகிறது.
English Summary
Foreign cigarettes worth Rs18 crore smuggled from Dubai seized in Sriperumbudur