மக்களே வெள்ள அபாய எச்சரிக்கை!!! கே.ஆர்.பி அணையில் நீர்வரத்து தாறுமாறாக அதிகரிப்பு...! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக, கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் மற்றும் பெங்களூரு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கே.ஆர்.பி.(KRP DAM ) அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆற்றின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு இருப்பதால், கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flood warning people Water inflow in KRP dam is increasing rapidly


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->