சிவகங்கை || கல்குவாரியில் சிக்கியிருந்த 5 பேரின் உடல் மீட்பு.!!
five peoples body rescue in sivakangai qwari
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை கிராமத்தில் செயல்படும் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வந்துள்ளது.
அப்போது அந்த பகுதியில் இருந்த பெரிய ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் மேலே இருந்து உருளத்தொடங்கின. இந்த சத்தம் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
ஆனால், 6 தொழிலாளர்கள் மீதும் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து நசுங்கின. அந்த பாறைகளின் மீதும் மேலும் சில பாறைகள் உருண்டு விழுந்ததால் அவர்கள் பாறைகளுக்குள் முழுவதுமாக புதைந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த சக தொழிலாளர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் படி அவர்கள் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாறையின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மூன்று பேர் பலத்த காயத்துடன் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு மீட்கப்பட்டனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இடிபாடுகளில் சிக்கிய மேலும் 3 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில் இரண்டு பேர் பிணமாக மீட்கப்பட்டனர். பாறை விழுந்ததில் அவர்களது உடல்கள் சிதைந்து போய் இருந்தன. மற்ற ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
five peoples body rescue in sivakangai qwari