கடன் பிரச்சினையால் எடுத்த இறுதி முடிவு...! மகனையும் கிணற்றில் தள்ளி தானும் தற்கொலை...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி ஊத்தங்கரை தாலுகா, சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே நேற்று, ஒரு கிணற்றில் ஆண் ஒருவர் மற்றும் 5 வயது சிறுவன் இருவரும் இறந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், சாமல்பட்டி காவலர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து கிணற்றில் சென்று இருவரின் உடல்களை அங்கிருந்து மீட்டு எடுத்தனர்.

பின்பு அவர்களுடைய பர்சையை திறந்தபோது, இறந்தவர்கள் திருப்பூர் மாவட்டம், நல்லூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 37 வயது பாலாஜி என்றும் அவரது 5 வயதான மகன் கவின் என்றும் தெரியவந்தது.

மேலும் மேற்கட்ட விசாரணையில், பாலாஜி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், திருப்பூரில் 15 வருடங்களாக தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் கடன் பிரச்சினையில் சிக்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

கடைசியாக, நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில், மனைவி சந்தியாவிடம் “பணம் வாங்கி வருகிறேன்” என்று தெரிவித்து, மகன் கவினுடன் ரெயிலில் தனது சொந்த ஊரான திருவண்ணாமலை செல்ல ரெயிலில் ஏறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, சாமல்பட்டி ரெயில் நிலையத்திற்கு திரும்பி வந்து இறங்கிய பின்னர், ரெயில் நிலையம் அருகே இருந்த கிணற்றில் மகனை தள்ளி கொன்றுவிட்டு, தானும் குதித்து தற்கொலை செய்தார் என்பது காவலர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

final decision made due debt problems He committed suicide by pushing his son into well


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->