தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து - பயணிகளின் நிலை என்ன?
fifteen passengers injured accident in ulunthurpettai
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள, உளுந்தூர்பேட்டை அருகே நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி பதினைந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைப்பார்த்த சகா வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fifteen passengers injured accident in ulunthurpettai