காதல் திருமணம் செய்து கொண்ட மகள்கள்... மன உளைச்சலில் தந்தை எடுத்த விபரீத முடிவு... மதுரை அருகே நிகழ்ந்த சோகம்...! - Seithipunal
Seithipunal


மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மன உளைச்சலில் மனைவி மற்றும் மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்,  வடபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் அழகுமலை. இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறாஎர். அழகுமலைக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவரது முதல் இரண்டு மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனல்ம் அழகுமலை மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

சம்பவதன்று, அவரது மனைவி மற்றும் மூன்றாவது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு அழகுமலையும் விஷமருந்தி தற்கொலை முயற்ச்சியில் ஈடுப்பட்டார். உடனே அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அழகுமலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father commits suicide because daughters married for love


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->