வாங்கிய கடனை திரும்ப தரல.. மகனை வெட்டிய தந்தை.. ஈரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Father arrested who try to kill his son
மகனை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், எல்லமடை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் லோகநாதன் இவர் விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், லோகநாதன் அங்குள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அங்கு வந்த அவரின் தந்தை தன்னிடம் வாங்கி பணத்தை தருமாறு கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராற்றில் லோகநாதனை தந்தை பழனிசாமி சரமாரியாக வெட்டினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் பழனிசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடனை திருப்பி தராததால் பெற்ற மகனை தந்தையே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father arrested who try to kill his son