கை, கால்களை கட்டி "மகனை" கொடூரமாக கொன்ற "தந்தை"...! மதுரையில் அதிர்ச்சி...! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மது போதைக்கு அடிமையான மகனின் கை, கால்களை கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் கொட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருடைய மகன் ராஜபிரபு (30), மது போதைக்கு அடிமையானவர். இதனால் குடும்பத்தில் தினமும் பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மனதளவில் மகனால் பெரிதும் பாதிப்படைந்த பெருமாள், இப்படி ஒரு மகன் இருப்பதைவிட கொன்று விடுவது நல்லது என்று முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து வழக்கம்போல் மது குடித்துவிட்டு வந்த மகனை நேற்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்ற பெருமாள், மகனின் கை, கால்களை கயிற்றால் கட்டி கிணற்றுக்குள் தள்ளி விட்டுள்ளார். இதில் ராஜ பிரபு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் பிணமாக கிடந்த ராஜ பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மகனை கொலை செய்த தந்தை பெருமாளை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father arrested for brutally Murdering son in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->