சொல் பேச்சை கேட்காமல் காதலித்த மகள்.. பீர் பாட்டிலால் குத்திய தந்தை கைது..! - Seithipunal
Seithipunal


மகள் காதலித்ததால் அவரை பீர் பாட்டிலால் குத்திய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் , முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி இவருக்கு திருமணமாகி மனைவியும் மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் ராஜேஸ்வரி அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் பழகி வந்தனர். அந்த இளைஞர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலித்ததை அறிந்த தந்தை மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதனைக் கேட்காது அந்த இளைஞர் உடன் பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த முரளி சம்பவத்தன்று மதுபோதையில் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் ராஜேஷ்வரியை குத்தி அங்கிருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரி அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்ற மகளையே தந்தை குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father arrested for attempt murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->