தந்தை சீரழித்த பெண்ணை, மகனும் சேர்ந்து கர்ப்பமாக்கிய சம்பவம்.! அரியலூர் அருகே கொடூரம்.!  
                                    
                                    
                                   FATHER AND SON RAPPED 32 YEARS WOMEN 
 
                                 
                               
                                
                                      
                                            மனவளர்ச்சி குன்றிய 32 வயதுள்ள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக தந்தை, மகன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் ஸ்ரீ புரந்தான் கிராமத்தைச் சேர்ந்த குமார் மற்றும் அவருடைய மகன் வயதுடைய காளிதாஸ்(22) என்கிற கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து அதே பகுதியில் வசித்து வருகின்ற 32 வயது மதிப்புடைய மன வளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். 
அந்த பெண்ணிற்கு இதை பிறரிடம் தெரிவிக்க இயலாது என்ற காரணத்தால் இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர். ஆனால், அவர் 4 மாத கர்ப்பிணியானதாக சில நாட்களுக்கு முன்னர் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பாதிக்கப்பட்டபெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 
எனவே, அவர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து அந்த பெண்ணின் சகோதரர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்சார் வழக்கு பதிவு செய்து குமார் மற்றும் காளிதாஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       FATHER AND SON RAPPED 32 YEARS WOMEN