தர்மபுரி அருகே பரிதாபம்.! கார் மோதி தந்தை-மகள் பலி..!! - Seithipunal
Seithipunal


தர்மபுரி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தனது 9 வயது மகள் ஸ்ரீஜாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது நாகனம்பட்டி ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட ராஜா மற்றும் அவரது மகள் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிய இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இரண்டு பேரும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை பிரயோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father and daughter killed in car collision in dharmapuri


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->