காட்டுப்பன்றிக்காக அமைத்த மின்வேலி.. பரிதாபமாக பலியான விவசாயி... காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


மின்வேலியில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், தல வாரம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் தனது குத்தகை நிலத்தில் நிலக்கடலை பயிர் இட்டிருந்தார். நள்ளிரவில் அவரது நிலத்தை காட்டு பன்றிகள் சேதப்படுத்தும் என கூறப்படுகிறது.

இதனால் காட்டுப்பன்றிகளை விரட்ட ராமசாமி நிலத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.  தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றிருந்த அவர் கால் இடறி மின்வேலியில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer Electorate Near Kanjipuram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->