இளைஞர்களே மிஸ் பண்ணீடாதிங்க. ஈரோடு மாவட்டத்தில் இன்று (21.01.2023) வேலைவாய்ப்பு முகாம்.!
Erode district employment camp today
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.
இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, இன்று (ஜனவரி 21ஆம் தேதி) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரோட்டில் உள்ள நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்பு, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Erode district employment camp today