தொடர் உயர்வில் முட்டை விலை.! என்இசிசி அதிரடி.! - Seithipunal
Seithipunal


தொடர் உயர்வில் முட்டை விலை.! என்இசிசி அதிரடி.!

தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் கடந்த மே மாதம் முதல் தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. 

இதனை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர். இதையடுத்து கடந்த 15-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.70-ல் இருந்து 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் விலை ரூ. 4.75 ஆனது. 18-ந்தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ. 4.85 ஆனது. 

இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று என்இசிசி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முட்டையின் விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் ரூ. 4.90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், என்இசிசி அறிவித்த விலையை விட முட்டை விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்று  என்இசிசி மற்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதேபோல், பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 92 ஆக தென்னிந்திய கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

egg price incrased in namakkal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->