சென்னை ஆவடியில் இரட்டைக்கொலை; இரண்டு சகோதரர்களை வெட்டிக்கொலை செய்த கும்பல்..! - Seithipunal
Seithipunal


ஆவடி அருகே சகோதரர்கள் இருவரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை 03 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கடந்த 03 தினங்களுக்கு முன்பு சென்னை காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Double murder in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->