திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறார்கள்...! தூய்மை பணியாளர்கள் போராட்ட விவகாரத்தில் திருமாவளவன் குமுறல்!
DMK VCK Alliance Thirumavalavan Sanitary workers protest
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர், நிலைமைக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு பல நலத் திட்டங்களை அறிவித்தது.
புதிய அறிவிப்புகளில், தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்குதல், பணியின்போது உயிரிழந்தால் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட ஆறு முக்கிய திட்டங்கள் அடங்கும். இந்த நடவடிக்கைகள் மூலம் பணியாளர்களுடன் அரசு சமரசம் ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தூய்மை பணியாளர் பிரச்சினையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது தவறானது என்று விமர்சித்தார். பணியாளர்களுக்கு நீதி கிடைப்பதை விட, சிலர் திமுக கூட்டணியைப் பிரிப்பதே நோக்கமாக வைத்துள்ளனர் என்றார்.
அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதற்கான விளக்கம் அவர்கள் வழங்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், மீதமுள்ள 4 மண்டலங்களில் 2 மண்டலங்களை தனியார் மயமாக்கும் முடிவை தற்போதைய அரசு வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
DMK VCK Alliance Thirumavalavan Sanitary workers protest