மக்களின் நலமே எங்கள் இலக்கு...! -கீதா ஜீவன் பெருமித அறிக்கை வெளியீடு
Our goal welfare people Geetha Jeevan proud statement released
சமூகநலத்துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள் மற்றும் திருநங்கைகளுக்காக தமிழக அரசு சாதித்துள்ள நலத்திட்டங்களைத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதத்துடன் விளக்கினார்.மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல புதுமை திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

“புதுமைப் பெண்” திட்டம் மூலம் 5.29 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1,000 பெறுகின்றனர். அதேபோல் “தமிழ்ப்புதல்வன்” திட்டம் வழியாக 3.92 லட்சம் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் 75,000 குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டது.
19 “தோழி விடுதிகள்” செயல்பாட்டில் உள்ளன; மேலும் 26 புதிய விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. போக்சோ வழக்குகளில் 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 1.39 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.திருநங்கைகள் ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது. பெற்றோரை இழந்த 6,910 குழந்தைகள் மாதம் ரூ.2,000 பெறுகின்றனர்.அடிப்படை வசதிகளில் பெருமளவில் முன்னேற்றம் காணப்படுகிறது.
மழைநீர் வடிகால், சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், குடிநீர் ஆகிய துறைகளில் ரூ.73.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.ஆர்.ஐ., ஸ்மார்ட் போர்டுகள், மற்றும் ரூ.930 கோடி மதிப்பிலான கடல்நீர் குடிநீராக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. விவசாயம், சுற்றுலா, கோவில் மேம்பாடு ஆகிய துறைகளும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, மீனவர்களுக்கு ரூ.8,000 நிவாரணம் போன்ற பல நலத்திட்டங்கள் மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன.“கடந்த நான்கு ஆண்டுகளில் தூத்துக்குடி வளர்ச்சி திசை மாறாதது, மக்கள் நலமும், மாவட்ட முன்னேற்றமும் எங்கள் அரசின் முகமாய் மிளிர்கிறது,” என கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
English Summary
Our goal welfare people Geetha Jeevan proud statement released