மக்களுக்கு என்றும் திமுக அரசு துணை நிற்கும் - அமைச்சர் உதயநிதி! - Seithipunal
Seithipunal


மக்களுக்கு என்றும் திமுக அரசு துணை நிற்கும் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு புதிய வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது என்று தெவிக்கப்பட்டிருந்தது. விழாக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது .

இந்தநிலையில், இன்று இந்த விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு  பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

விழாவின் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, திமுக அரசு எப்போது மக்களுக்கு துணையாக நிற்கும். மக்களும் திமுக அரசுக்கு துணையாக நிற்கிறார்கள் என்று நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற வைத்து நிரூபித்து விட்டீர்கள்.

ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான விஷயம் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை அவசியம். இதனை  திமுக அரசு நிறைவேற்றி வருகிறது என தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து பேசி அமைச்சரின் உதயநிதி, 1970-ல் கலந்த தமிழ்நாடு குடிசை மற்றும் வாரியத்தை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை மக்களுக்கு சேவை செய்யும் திட்டமாக செயல்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK government will always support the people Minister Udhayanidhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->