ECI மீது பாய்ந்த வழக்கு.. தேதியை குறித்த நீதிமன்றம்.. அதிரடி காட்டிய ஆர்.எஸ் பாரதி.!!
Dmk case file against Election commissioner
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தலுக்காக திமுக சார்பில் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்க தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பத்தின் மீது இந்திய தேர்தல் ஆணையர் அனுமதி வழங்காமல் சாதாரண காரணங்களை கூறி அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது. அனுமதி வழங்காமல் திமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துகிறது.

எனவே தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவை மறு பரிசீலனை செய்து திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்க கோரி திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் (ஏப்ரல் 15ஆம் தேதி) இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.
English Summary
Dmk case file against Election commissioner