தி.மு.க. வேட்பாளர் வீட்டில் அதிரடி கொள்ளை...! 122 பவுன் நகைகள் மாயம், பரபரப்பு...!
DMK candidate house robbed 122 pounds jewelry missing excitement
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் சூடு கிளம்பியுள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் துணிச்சலான கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இல்லத்தில் பெருமளவு நகைகள் திருடப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட ஆய்வில் சுமார் 122 பவுன் நகைகள் மாயமானிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவ இடத்தில் தடயங்களை கண்டறிய காவலர்கள் மோப்ப நாயை பயன்படுத்தினர். மேலும், சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கொள்ளையடித்து தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களை கண்டுபிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
DMK candidate house robbed 122 pounds jewelry missing excitement