தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜயகாந்த்.!! - Seithipunal
Seithipunal


தே.மு.தி.க சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சாதி, மதம் இவற்றை புறம் தள்ளி, ஒற்றுமையை போற்றும் வகையில் வருடந்தோறும் எல்லா பண்டிகைகளையும் தேமுதிக சார்பில்  கொண்டாடுவது வழக்கம்.

 அதன் அடிப்படையில் வருகிற சனிக்கிழமை காலை 8 மணியளவில் (25.12.2021) கிறிஸ்துமஸ் தினத்தன்று (St. Thomas Mount)   புனித தாேமையார் மலை பட்ரோடு பகுதியில் உள்ள புனித பத்ரிசியார் ஆலயத்தில் (St. Patrick's Church) தேமுதிக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற உள்ளது. 

இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk christmas celebration


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->