12 வயது சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரன்.. மருத்துவ சோதனையில் அதிர்ச்சி.. திண்டுக்கல்லில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பெற்றோருடன் வசித்து வருகிறார். இதே பகுதியில் வெள்ளையங்கிரி என்பவனும் வசித்து வருகிறான். இந்நிலையில், காமுகன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிய வருகிறது. 

இது தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதால், சிறுமியும் பயந்துபோய் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, பெற்றோர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததுள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரணை செய்கையில், வெள்ளையங்கிரியின் சுயரூபம் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் புகுந்த கொடூரன் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வெள்ளயங்கிரியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Child Girl 12 Years Old Sexual abuse Police Arrest Culprit 6 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->