தருமபுரி | கள்ளக் காதலிக்கு ஒரு கள்ளக் காதலன்! கள்ளகாதலிலும் ஒரு உண்மை காதலனின் சோக முடிவு! - Seithipunal
Seithipunal


தருமபுரி : கடத்தூர் அடுத்த புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். 37 வயதான இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கலைமணி (32 வயது) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே கலைமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இரண்டாவதாக ஒரு கள்ளக்காதல் அரங்கேறியுள்ளது.

புதிய கள்ளக்காதலனால் பழைய கள்ளக்காதலன் செல்வத்தை கழட்டி விட நினைத்த கலைமணி, தன்னை மறந்து விடுமாறும், தன்னை சந்திப்பதை நிறுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த நேற்று கலைமணியின் வீட்டுக்கு செல்வம் வந்துள்ளார். இது குறித்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கலைமணி பிடிவாதமாக இருந்ததால், மனம் உடைந்து போன செல்வம் அவரின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செல்வம் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dharmapuri puthupatti illegal affair


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->