பிரசவம் பார்த்த நேரத்தில் மருத்துவர்கள் செய்த காரியம்.! துடிதுடித்து பறிபோன உயிர்.!
delivery operation gone mistake by doctor
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக பிரியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.
அங்கே அவருக்கு, மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு, ஒரு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பெண்ணுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதன் காரணமாக, அவரை புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பிரியாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். பிரசவத்தின் போது, மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததே அவர் உயிரிழக்க காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டி, மருத்துவமனையை முற்றுகையிட்டு இருக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
English Summary
delivery operation gone mistake by doctor