கன்னியாகுமரியில் விபரீதம்: குடும்ப சண்டையில் மாமியார் மீது வெந்நீர் ஊற்றிய மருமகள்..! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேபாகோடு மாதிக்காவிளையை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மனைவி மரியஜோய்(67). இவர்களுக்கு 02 மகன்கள் உள்ள நிலையில், 02-வது மகன் சந்தோஷ்குமார் மனைவி சைனிமோள்(35). 

இரண்டாவது மருமகளான சைனிமோளுக்கும், மாமியார் மரியஜோய்க்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்ட்டுள்ளது. ம்பவத்தன்று மாமியார், மருமகள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது வாக்குவாதமாக முற்றியுள்ளது.  

அப்போது ஆத்திரமடைந்த மருமகள் சைனிமோள், மாமியாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து மாமியார் மீது ஊற்றியுள்ளார்.அத்துடன், ஆத்திரம் அடங்காமல் மாமியாரை கையால் முதுகில் தாக்கியும் உள்ளார்.

இதில் காயமடைந்த மாமியார் மரியஜோயை குடும்பத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து மரிய ஜோய் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சைனிமோள் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Daughter in law pours boiling water on mother in law in anger over family dispute in Kanyakumari


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->